Thursday, 23 September 2021

கூடலூர்- கடலையூர்- கடலூர்

 

கூடலூர்- கடலையூர்- கடலூர்

கடல் வற்றிய நிலமாம் கடலூர்; சோழரின் வணிக வழியாம் கடலூர்

கடலை விளைந்த கடலையூராம் கடலூர்; மூன்று ஆறுகளின் முக்கூடலாம் கடலூர் 

ஆத்திகர் வள்ளலார் பிறந்தது கடலூர்; நாத்திகர் வீரமணி பிறந்ததும் கடலூர்

அருமை அஞ்சலையம்மாள் பிறந்தது கடலூர்; தலைமை சுப்பராயலு பிறந்ததும் கடலூர்

பரங்கிப்பேட்டையில் இரும்புக்கு உருக்கு ஆலை; நெல்லிக்குப்பத்தில் சர்க்கரைக்கு இருக்கு ஆலை

மஞ்சக்குப்பம் கடலூரின் புது நகர்; பாண்டிச்சேரி கடலூரின் புற நகர்

அடர்க் காடு இருப்பது பிச்சாவரம்; நடராசர் வீடு இருப்பது சிதம்பரம்

வெள்ளிப் பிள்ளையாரும் உண்டு; நெய்வேலி நிலக்கரியும் உண்டு!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment