கூடலூர்- கடலையூர்- கடலூர்
கடல் வற்றிய நிலமாம் கடலூர்; சோழரின் வணிக வழியாம் கடலூர்
கடலை விளைந்த கடலையூராம் கடலூர்; மூன்று ஆறுகளின் முக்கூடலாம் கடலூர்
ஆத்திகர் வள்ளலார் பிறந்தது கடலூர்; நாத்திகர் வீரமணி பிறந்ததும் கடலூர்
அருமை அஞ்சலையம்மாள் பிறந்தது கடலூர்; தலைமை சுப்பராயலு பிறந்ததும் கடலூர்
பரங்கிப்பேட்டையில் இரும்புக்கு உருக்கு ஆலை; நெல்லிக்குப்பத்தில் சர்க்கரைக்கு இருக்கு ஆலை
மஞ்சக்குப்பம் கடலூரின் புது நகர்; பாண்டிச்சேரி கடலூரின் புற நகர்
அடர்க் காடு இருப்பது பிச்சாவரம்; நடராசர் வீடு இருப்பது சிதம்பரம்
வெள்ளிப் பிள்ளையாரும் உண்டு; நெய்வேலி நிலக்கரியும் உண்டு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment