கலயத்தில் கஞ்சி
மிஞ்சி போன சோறுதான் கஞ்சி; சூட்டை இழந்த சோறுதான் பழையக் கஞ்சி
பானையில் குதித்த அரிசிதான் கஞ்சி; நீரில் இளைப்பாறிய சோறுதான் கஞ்சி
கூம்பாவில் வைத்தும் உண்ணுவர்; மண் கலயத்தில் வைத்தும் உண்ணுவர்
உப்புக் கல் மிளகாயோடு ஒரு கடி; சின்ன வெங்காயத்தோடு மறு கடி
மென்ற சோறு கூழ்மமாக கடந்து செல்லும்; மெல்லாத சோற்றை நீராகாரம் கடத்திச் செல்லும்
உழைப்பால் கிடைத்த மருதக் கஞ்சி; சோழ நாட்டின் சுவையானக் கஞ்சி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment