Friday, 24 September 2021

கலயத்தில் கஞ்சி

 

கலயத்தில் கஞ்சி

மிஞ்சி போன சோறுதான் கஞ்சி; சூட்டை இழந்த சோறுதான் பழையக் கஞ்சி

பானையில் குதித்த அரிசிதான் கஞ்சி; நீரில் இளைப்பாறிய சோறுதான் கஞ்சி

கூம்பாவில் வைத்தும் உண்ணுவர்; மண் கலயத்தில் வைத்தும் உண்ணுவர்

உப்புக் கல் மிளகாயோடு ஒரு கடி; சின்ன வெங்காயத்தோடு மறு கடி

மென்ற சோறு கூழ்மமாக கடந்து செல்லும்; மெல்லாத சோற்றை நீராகாரம் கடத்திச் செல்லும்

உழைப்பால் கிடைத்த மருதக் கஞ்சி; சோழ நாட்டின் சுவையானக் கஞ்சி!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment