
செங்கல்பட்டு
செங்கல் கொண்டு வீடு கட்டியதுமுண்டு
செங்கல் கால்வாயைப் பார்த்ததுமுண்டு
செந்நிறப்பட்டு உடுத்துவதுமுண்டு
செங்கல்பட்டு என்றொரு ஊருமுண்டு
செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்தப் பட்டு
பூக்களை விட்டால் செங்கழுநீர்ப்பட்டு
செங்கல்பட்டான செங்கழுநீர்ப்பட்டு
அதுதான் நீர்வளமிக்க செங்கல்பட்டு
இடம்பெயரும் பறவைகளுக்கு ஏற்ற வேடன்தாங்கல் ஆலயம்
வேலனை வழிபடுவதற்கு நடுபழனியில் தண்டாயுதபாணி ஆலயம்
நவீன வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் இங்கு ஏராளம்
கல்விப் பயில பல்வேறு கல்லூரிகளும் இங்கு ஏராளம்
மகத்தான மதுராந்தகம் என்றொரு ஏரி
வற்றாத மற்றொரு கொலவை ஏரி
கொலவையில் கதிரவன் முகம்படும்
கொலவையில் நிலாவே அகப்படும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment