Wednesday, 22 September 2021

செங்கல்பட்டு



 

செங்கல்பட்டு

செங்கல் கொண்டு வீடு கட்டியதுமுண்டு

செங்கல் கால்வாயைப் பார்த்ததுமுண்டு

செந்நிறப்பட்டு உடுத்துவதுமுண்டு

செங்கல்பட்டு என்றொரு ஊருமுண்டு

செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்தப் பட்டு

பூக்களை விட்டால் செங்கழுநீர்ப்பட்டு

செங்கல்பட்டான செங்கழுநீர்ப்பட்டு

அதுதான் நீர்வளமிக்க செங்கல்பட்டு

இடம்பெயரும் பறவைகளுக்கு ஏற்ற வேடன்தாங்கல் ஆலயம்

வேலனை வழிபடுவதற்கு நடுபழனியில் தண்டாயுதபாணி ஆலயம்

நவீன வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் இங்கு ஏராளம்

கல்விப் பயில பல்வேறு கல்லூரிகளும் இங்கு ஏராளம்

மகத்தான மதுராந்தகம் என்றொரு ஏரி

வற்றாத மற்றொரு கொலவை ஏரி

கொலவையில் கதிரவன் முகம்படும்

கொலவையில் நிலாவே அகப்படும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment