நோயுற்று அப்பா சென்னை வந்ததும் அனைவரையும் போகச் சொல்ல
வந்தவர் யாவரும் தன்னை மட்டும் விட்டுவிட்டு வீட்டுக்குச் செல்ல
நள்ளிரவில் மாமரத்தடி நோக்கிச் சென்றதோ ஓய்வு கொள்ள
நடு இரவில் காவலர் எழுப்பி O+ இரத்தம் ஏற்பாடு செய்யச் சொல்ல
19 வயதில் சென்னைக்குப் புதியவன் மனதில் பயம் ஒட்டிக் கொள்ள கைலியோடும் வெறுங்காலோடும்
மலர் மருத்துவமனைக்குச் செல்ல
குருதி இல்லையெனச் சொன்னதும் சென்ற வழியிலேயே நடந்துச் செல்ல
வடமொழி பேசிய IIT மாணவர் மூலம் இரத்தம் அப்பாவின் உடலில் செல்ல
பின் இரண்டு வருடம் தனது அப்பா வாழ்ந்ததைச் சொல்லச் சொல்ல
கேட்டவர் கண்களில் கண்ணீர் சொட்டு சொட்டாக வந்தது மெல்ல மெல்ல!
(நண்பர் ஒருவர் தனது அப்பாவைப் பற்றிச் சொன்னதைக் கவிதையாக்கினேன்)
- தஞ்சை த.இராமநாதன்
- தஞ்சை த.இராமநாதன்

பெரும்கடமை ஆற்றிய அருமை.
ReplyDeleteநண்பர் ஒருவரைப் பற்றியது.
Delete