உழைத்தோர் உழைத்துச் சளைத்து இளைத்தாலும் வாழையைப் பாரீர்
வாழ்ந்தோர் வாழ்ந்து வீழ்ந்து தாழ்ந்தாலும் வாழையைப் பாரீர்
வெட்டினாலும் வெட்டியதை மறந்து
துளிர்த்து வளரும் வாழையைப் பாரீர்
அறுத்தாலும் அறுத்ததைத் தவிர்த்து அறுவடையிலும் அறுபடும் வாழையைப் பாரீர்
வாழைக்கன்றாக ஒன்றை எடுத்து மண்ணில் நன்றாக ஊன்றிப் பாரீர்
வாழையடி வாழையாக வம்சம் வாழ வாழைப் பாடலைப் பாடிப் பாரீர்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment