ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகச் சோமன்தெரு தொடக்கப் பள்ளியில் பயின்றோமே, எப்பொழுதும் ஒரே அணியில் இருந்து கபடி ஆடி ஜெயித்தோமே!
நாக்கைக் கடித்தபடி கொதித்து ரைடு (ride) எடுத்து உதைத்து வரத் துடித்த நான் இங்கே! கையைப் பிடித்தபடி என்னை அமைதிப்படுத்தி, கபடி கபடியெனப் பாடியபடி கதறடித்த என் டாங்கே எங்கே?
வேங்கைப் பள்ளம் வடப்பக்கம் நடு இரவில் வயலுக்கு நாம் நீர்ப் பாய்ச்சியதை நினைக்கின்றேன்; சிங்கப்பூரில் பகல் பொழுதினில் பலர் அமர்ந்திருக்கும் பகுதியில், உம் மறைவை எண்ணி அழுதபடியே இக்கவிதையை முடிக்கின்றேன்!
- தஞ்சை த.இராமநாதன்

🙏🏽🙏🏽🙏🏽
ReplyDelete🤝🤝
Delete