Wednesday, 3 June 2026

என் நண்பன் டாங்கே

 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகச் சோமன்தெரு தொடக்கப் பள்ளியில் பயின்றோமே, எப்பொழுதும் ஒரே அணியில் இருந்து கபடி ஆடி ஜெயித்தோமே!

​நாக்கைக் கடித்தபடி கொதித்து ரைடு (ride) எடுத்து உதைத்து வரத் துடித்த நான் இங்கே! கையைப் பிடித்தபடி என்னை அமைதிப்படுத்தி, கபடி கபடியெனப் பாடியபடி கதறடித்த என் டாங்கே எங்கே?

​வேங்கைப் பள்ளம் வடப்பக்கம் நடு இரவில் வயலுக்கு நாம் நீர்ப் பாய்ச்சியதை நினைக்கின்றேன்; சிங்கப்பூரில் பகல் பொழுதினில் பலர் அமர்ந்திருக்கும் பகுதியில், உம் மறைவை எண்ணி அழுதபடியே இக்கவிதையை முடிக்கின்றேன்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: