Sunday, 8 March 2026

ஒழுக்கப் பண்பு கொள்

 

ஒழுக்கப் பண்பு கொள்

அன்போடு பேசி ஆறுதல் சொல்லி இயல்பான ஈகைப் பண்பைக் கொள்

உண்மையைப் பேசி ஊக்கத்துடன் வாழ எளிமையை ஏற்கும் பண்பைக் கொள்

ஒரே குலத்தில் ஓரணி உலகத்தில் சகோதர நல்லிணக்கத்தைக் கொள்

பெரியோரைத் துதித்து வயதில் பெரியாரை மதித்து அமைதி கொள்

இரக்கக் குணத்தோடு இல்லார்க்குக் கொடுக்கும் குணத்தையும் கொள்

பொறாமைப்படுவதை விரட்டி விட்டு போட்டி போட கற்றுக் கொள்

தேவையற்ற கோபத்தைத் தவிர்த்து
தேவையான கோபத்தைக் கொள்

தன்னிகரில்லாத தமிழை வளர்க்க கவிதை எழுத ஆர்வம் கொள்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment