ஒழுக்கப் பண்பு கொள்
அன்போடு பேசி ஆறுதல் சொல்லி இயல்பான ஈகைப் பண்பைக் கொள்
உண்மையைப் பேசி ஊக்கத்துடன் வாழ எளிமையை ஏற்கும் பண்பைக் கொள்
ஒரே குலத்தில் ஓரணி உலகத்தில் சகோதர நல்லிணக்கத்தைக் கொள்
பெரியோரைத் துதித்து வயதில் பெரியாரை மதித்து அமைதி கொள்
இரக்கக் குணத்தோடு இல்லார்க்குக் கொடுக்கும் குணத்தையும் கொள்
பொறாமைப்படுவதை விரட்டி விட்டு போட்டி போட கற்றுக் கொள்
தேவையற்ற கோபத்தைத் தவிர்த்து
தேவையான கோபத்தைக் கொள்
தன்னிகரில்லாத தமிழை வளர்க்க கவிதை எழுத ஆர்வம் கொள்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment