Saturday, 7 March 2026

ஐம்பூதம் போற்றிடு


ஐம்பூதம் போற்றிடு

கரையான் புற்றின் நிலத்தடியில்
வானம் பொழிந்த நீர் இருக்குமென
அங்கே கிணறு வெட்ட புறப்பட்டு
சாம்புராணி புகையோடு வழிபட்டு
மண்ணை வெட்ட மண்வெட்டி எடுத்து
சுற்றளவினுள் குழியைத் தோண்டி
பாறையை உடைக்க கடப்பாரை எடுத்து
தீப்பொறி பறக்க பாறையை அகற்றி
அதன்பின் குறுமணலை அள்ளினால்
சலசலவெனும் ஓசையோடு நீர் ஊறும்
ஊறிய நீர் தெளிந்த பின் மேலிருந்து
பார்த்தால் கிணற்றினுள் ஆகாயம் தெரியும்
ஆகாயம் மட்டுமா? நாம் போற்றுகின்ற ஐம்பூத ஐக்கியமும் தெரியும்!

- தஞ்சை த.இராமநாதன் 


2 comments: