ஏணியாய் வாழ்ந்திடு
ஏறிச் செல்வோர் மிதித்து உதைத்துச் சென்றாலும் ஏணியாகவே எப்படி நிற்கிறாய் ஏணியே?
ஏறிச் சென்றோர் இறங்க நேர்ந்தாலும் இறங்குவோர் இறங்கவும் இரங்கியே நிற்கிறாயே ஏணியே?
ஏணிப்படியே ஏன் இப்படி ஏணியோடு ஏணியாக இணைந்தாய் நகராத படியே? நகர்த்தி நகரத்திற்கு கொண்டு சென்றாலும் நகர்ந்த நகரப்படி மாறாமல் நகராத படியாக இருப்பதெப்படி நல்ல படியே?
மனிதன் ஏணியாக வாழ முயன்றிடலாம் ஏணியாகவே வாழ்ந்து முடிந்துவிடலாகாது!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment