சத்தியத்தின் வேதனை
விவாதம் செய்யும் விதம் வாதம் செய்யும் வதையைப்போல் படுத்தி
கேட்போரையும் கேவலப்படுத்தி
கோரச் சொல்லைச் சொல்லுவதுண்டு
போட்டிப் போட்டு பேட்டிக் கொடுத்துப் பேச தெரியாதவன்கூட கொஞ்சம்
துட்டைக் கூட்டிக் கொடுத்து துண்டை உயர்த்திப் பிடித்து வெல்வதுண்டு
சாத்தியமானதைச் சாத்தியமாக்க சமத்துச் சாமர்த்தியம் இல்லையேல்
சத்திய சோதனையாக வேதனையில்
வெந்தும் நொந்தும் உழலுவதுண்டு!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment