Thursday, 26 February 2026

அன்னையரைப் போற்றுவோம்

அன்னையரைப் போற்றுவோம்

தாங்க முடியாத மனவலியை
அம்மா என இதயத்தில் ஒலித்தால்
வலித்த வலியை  ஓடவிடும் அன்னையரைப் போற்றுவோம்

தூங்க முடியாத உடல்வலியைத் தாயே என கதறிக் கண்ணீரில் நனைந்தால் கண்ணீரைத் துடைத்து அணைத்துக் காத்திடும் அன்னையரைப் போற்றுவோம்

உயிர் கொடுத்து உருவம் கொடுத்த அன்னையரைப் போற்றுவோம்
வளர்த்து எடுத்து வடிவம் கொடுத்த அன்னையரைப் போற்றுவோம்

பிறந்தது முதல் இறக்கும் வரை மறைந்தாலும் மறக்க முடியாத அம்மாவைத் தாயேயென அழைத்து நமது அன்னையரைப் போற்றுவோம்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment