Thursday, 25 December 2025

எழுத்து சொல் பேச்சு

 

எழுத்து சொல் பேச்சு

எழுதிய எழுத்தை எழுதாது எழுதும் எழுத்தையும் எழுதாத எழுத்தாக எழுதினால்தான் எழுத்தாகுமென எழுதுகின்றீரா?

சொல்லிய சொல்லைச் சொல்லாது சொல்லும் சொல்லையும் சொல்லாத சொல்லாகச் சொன்னால்தான் சொல்லாகுமென சொல்கின்றீரா?

பேசிய பேச்சைப் பேசாது பேசும் பேச்சையும் பேசாத பேச்சாகப் பேசினால்தான் பேச்சாகுமென பேசுகின்றீரா?

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment