சாப்பாடு உண்டா என்றால் விருந்தே உண்டென உணவளிப்பர்
சாப்பாட்டைச் சாப்பிட்டால் உண்டதும் உண்டதை உணவென்பர்
உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டபின் உண்டாகுமென்பர்
உண்ட உணவு சரியில்லையாகில் சாப்பாடே சரியில்லையென்பர்
உண்டு கொழுத்து உடம்பை வளர்த்தார் உணவில்லாரின் உணர்வை உணரார்
பகுத்து உணவை நிரவி உண்ணாதோர் உயிரின் உரிமையை உணராதார்!
- தஞ்சை த.இராமநாதன்

👌🤝🤝🤝
ReplyDelete🙏
ReplyDelete