Sunday, 31 August 2025

தமிழின் தடம்

 

இன்றைக்கென்பது இன்னைக்கென இன்றா ஆனது?
என்றைக்கென்பது என்னைக்கென என்றோ ஆனது
அன்றைக்கென்பது அன்னைக்கென அன்றே ஆனது

கொன்றவனைக் கொன்னவனென கொன்றதாலே ஆனது
தின்றவனைத் தின்னவனென தின்றதாலே ஆனது
நின்றதை நின்னதென நினைவில் நிற்பதாலே ஆனது

நன்றாக இருந்தால் நன்னா இருக்கென இன்றா ஆனது?
ஒன்னா இருந்தால் ஒற்றுமை என்பது என்றோ ஆனது
அன்னைக்கோ இன்னைக்கோ என்னைக்கோ
அன்றும் இன்றும் என்றும் தமிழின் தரம் தடம் மாறிவிட விடக் கூடாது!

- தஞ்சை த.இராமநாதன்

4 comments: