Friday, 21 February 2025

உலகத் தாய்மொழி நாள்

 

உலகத்தில் இருப்போர் அனைவருக்கும் இருக்கலாம் தாய்மொழி
உலகத்தின் மொழிகளிலெல்லாம் அம்மாவாக இருப்பது தமிழ்மொழி

எந்த மொழியும் தமிழுக்கு இணையாகா என்பதை அனைவரும் அறிவோம்
இந்தி மொழி என்றும் இணையாகாது என்பதையும் அனைவரும் அறிவோம்

இந்தா இந்தா எனச் சொல்லி ஏந்தி ஏந்தி பிடித்தாலும் அலைவது வீணே
தமிழ் தமிழ் எனச் சொல்லித் தாங்கித் தாங்கிப் படித்தால் வாழ்வது தானே

எம்மொழியையும் எவரும் படிக்கட்டும் பாரினில் இன்றும் இப்போதும்
நம்மொழியை நாம் யாவரும் படிப்போம் பாரினில் என்றும் எப்போதும்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment