கண்ணும் கருத்தும்
கண்ணால் கண்டதும் உறுத்தினால் கண்டதைக் கருத்தாக்காது திருந்தலாம்
கண்டபடி கண்டதைப் பார்த்து ஓடினால் கண்டதைக் காணாதபடி திரும்பலாம்
கண்டும் காணாததுபோல் குருடானால் கேட்டும் கேளாததுபோல் செவிடாகலாம்
கண்டபடிப் பேசியதால் ஊமையானால் பேசியதைப் பேசாமல் அமைதியாகலாம்
அண்ணல் நோக்கிய நோக்கலில் சீதையும் நோக்கினள்
நோக்கிய நோக்கல் நக்கலில் முடியாமல் மணந்தனள்
கண்ணோடு கலந்து மலர்ந்தது மணமான வாழ்வானது
கருத்தோடு பிளந்து உதிர்ந்தது இனமான தாழ்வானது!
- தஞ்சை த.இராமநாதன்

Good 👌👍
ReplyDelete🙏🙏
Delete