விடியற்காலையில் தூக்கம் கலைந்து அலுப்போடு எழுந்து
எண்ணெயை உச்சந்தலையில் கையால் சூடேறத் தேய்த்து
அடுப்பின் அனலில் காய்ந்த வெந்நீரை மெதுவாக மொண்டு
வெந்நீர் ஊற்றுமுன் அரப்பை பக்குவமாகத் தலையில் தேய்த்து
தலையில் சுடுநீரை ஊற்றி அரப்புச் சுவையை சுவைத்து
அரப்பு கண்ணில் பட்டு வழியும் கண்ணீரைப் புதுத் துண்டால் துடைத்து
பொத்தானைக் கழற்றி மணம் வீசும் புது உடையை உடுத்தி,
ஆனந்தமாய் உலா வந்த நாளே அந்த நாள்!
- தஞ்சை த.இராமநாதன்

நல்ல ஞாபகம், வாழ்த்துக்கள்
ReplyDelete🤝
ReplyDeleteஆமாம்
ReplyDelete🤝
DeleteGolden days 😀
ReplyDelete🤝
ReplyDelete