Wednesday, 17 July 2024

உயிரைக் காக்கும் நெல் மணிகள்

உயிரைக் காக்கும் நெல் மணிகள்

நாற்றங்காலில் கால் பதித்து 
காலை முதல் மாலை வரை உழுது
உழப்பட்ட சேற்றைச் சமப்படுத்தி
நன்னீரை நிரப்பித் தெளிய வைத்து            ஊறி முளை விட்ட விதையை எடுத்து
கூடையில் வைத்துச் சுற்றி விதைத்து
பருவம் வரும்வரை நாற்றை வளர்த்து
பருவம் வந்தபின் நாற்றைப் பறித்து
வயலின் உழையில் நடவை முடித்து
நீர்ப் பாய்ச்சி வரப்பு மிதித்து வளர்த்து
உரத்தை வீசிக் களையைப் பறித்து
பயிரைக் காக்கப் பூச்சி மருந்து தெளித்து
கருக்காய் ஆகாமல் நெல்மணிக் காத்து
பொன்னிறமாகும் கதிரைப் பார்த்து
கதிர் அரிவாள் வைத்து அறுத்து எடுத்து
அரி அரியாய் வயலில் பரப்பி வைத்து
கட்டுக் கட்டாய்க் கட்டி தலையில் தூக்கி
களம் கொண்டுபோய் அரியை அடித்து
உதிர்ந்த நெல்லை பொலியில் குவித்து
கூடை நெல்லை தோளில் அணைத்து
காற்றோடு பதரைப் பறக்க வைத்து
முறம் கொண்டு பதரை வீசி எடுத்து
கட்டிய மூட்டையில் அழகாய் இருந்து
மனித உயிரைக் காக்கக் காத்திருப்பது    அரிசி தரும் பொன் நிற நெல் மணிகள்!

- தஞ்சை த இராமநாதன்

6 comments:

  1. ரவி சங்கர்17 July 2024 at 20:57

    நெற்களஞ்சிய பெருமையை நிறைவாக சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  2. அந்தகாலம் மாரிபோச்சு.எல்லாம் எந்திரமயமாகிவிட்டது.வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. Looks again start nature agriculture with new name of Organic

    ReplyDelete