Sunday, 21 July 2024

மனதில் நிலைத்த என் மாமரங்கள்

 

மனதில் நிலைத்த என் மாமரங்கள்

மேலக்கொல்லையின் மேலக் கடைசியில் இருந்த மல்கோவா மரமே!                மாங்காயைப் பறித்துக் கீழே போட்டதும் தெறித்து விடும் மென்மைமிகு மரமே!

பரந்து விரிந்த பெரிய மரத்தடியில் நான் தரையில் அமர்ந்தே பறித்த நீல மரமே!
உன் நிழலில் அமர்ந்து பறித்து அடுக்கிப் பரவசமடைய வைத்த நற்சுவை மரமே!

சின்ன மரமாக இருந்தாலும் பெரியளவு மாங்காயைக் கொடுத்த ஒட்டு மரமே!
காயாக உண்டபோதும் தனிச் சுவை
பழமாக இனியக் கனிச் சுவை மரமே!

களத்தோரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்த செந்நிற காயின் செந்தூரா மரமே!
மாவுபோல் கடிபட்டுத் தனி மணத்தோடு
இரண்டு கிளையாக வளர்ந்த மரமே!

தரையோடு படுத்து தலை நிமிர்த்தி உருண்டை மாங்காய் போரடி மரமே!
அடை மாங்காய் வைக்க அருமையான நொண்டி மரமெனப் பெயருடைய மரமே!

மரத்திலேயே பழுத்துத் தானாக விழுந்து கமகமவென மணக்கும் வாசல் மரமே!
நாரோடு இருந்தாலும் நாறும் இனிக்கும்
தோலும் இனிக்கும் நற்கனி மரமே!

மாங்காய்ப் பறித்த நாட்களை மனதிலே அசைபோட வைக்கும் என் மாமரங்களே!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment