Thursday, 1 February 2024

பாரம்பரியமிக்கது பரம்பரை

 

பாரம்பரியமிக்கது பரம்பரை

இருப்பதைப் போதாதென நினைத்தால்
இல்லாததே நினைப்பில் அகலாது நிற்கும்
இருப்பதே போதுமென நினைத்தால் இல்லாதது நினைப்பில் இல்லாது நிற்கும்

கல்லைக் கல்தானேயென நினைத்தால் கல்லால் கட்டிய கல்லணை நில்லாது வீழும்
கல்லையே கலையென நினைத்தால் கல்லால் கட்டிய கோயில் நிலைத்து வாழும்

தானமும் தர்மமும் செய்ய நினைத்தால் தனமும் பணமும் தானாக வளர்ந்து செழிக்கும்
நியாயமும் நேர்மையும் உள்ள மனதால்
பாரம்பரியமும் பரம்பரையும் செழித்து வளரும்!

- தஞ்சை த இராமநாதன்

2 comments: