அதிஷ்டக்கார அம்மாயி அம்மணி அம்மாள் (38வது வருட நினைவு நாள்)
பாட்டன் வீட்டுக் கண்டியர் குடும்பத்தில் பிறந்தவர் இம்அம்மணி
அம்மா வீட்டு மாதிரார் குடும்பத்தில் வாக்கப்பட்டவர் இப்பெண்மணி
ஆறு அருமைப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர் அம்மணி
இருபது பேரப் பிள்ளைகளை வளர்த்தெடுத்தவர் இப்பெண்மணி
மாடி வீட்டு மாதுராருக்கு வலதுகரமாய் இருந்தவர் அம்மணி
ஏழை எளியோர்க்கு உதவிகரமாய் இருந்தவர் இப்பெண்மணி
காதில் புல்லாக்கை அணிந்த பணக்கார முகவழகி அம்மணி
கழுத்தில் அட்டிகை அணிந்த குணக்கார
அகவழகி இப்பெண்மணி
தாயம் விளையாட்டில் சாதுரியமாகக் கோபப்படுவார் அம்மணி
பாயும் காளை மாட்டைச் சாமர்த்தியமாகப் பிடித்திடுவார் இப்பெண்மணி!
அம்மணி அம்மாளென பெயர் பெற்ற இப்பெண்மணிதான் எனக்கு அம்மாயி இறந்து 38 ஆண்டுகள் ஓடோடி விடினும் என்றும் நீங்கா நினைவில் வாழும் என் அம்மாச்சி!
- தஞ்சை த.இராமநாதன்

கவிஞரின் கவிதை சூப்பர் by ulaganathan
ReplyDelete🙏🙏
Delete