தஞ்சாவூரார் இராசராச சோழன்
உலகிலே தலை சிறந்ததொரு பேரரசர்
கல்லிலே கலையைத் தந்ததொரு பேரரசர்
தஞ்சையைச் சிவ பூமியாக்கிய பேரரசர்
தஞ்சையைத் தவப் பூமியாக்கிய பேரரசர்
சதயத் திருவிழா பெரிய கோவிலில்
இதயத் திருவிழா பெரிய கோவிலில் பக்தியோடு விழா பெரிய கோவிலில்
சக்தியோடு விழா பெரிய கோவிலில்
அயலார் ஆச்சரியப்படும் பெரிய கோவில்
அரசியலார் அச்சப்படும் பெரிய கோவில்
படித்தறிந்தோர் போற்றும் பெரிய கோவில்
பகுத்தறிந்தோர் போற்றும் பெரிய கோவில்
தஞ்சைக்கு மட்டும் சதய விழாவிற்கு அரசு
விடுமுறை
எஞ்சிய மாவட்டத்திற்கு ஏன் இல்லை அரசு விடுமுறை?
இராசராச சோழன் தஞ்சைக்கு மட்டும் சொந்தமென்றால்---
சோழன் ஆண்ட தரணி யாவும் தஞ்சைக்குச் சொந்தமன்றோ?
- தஞ்சை த.இராமநாதன்

அருமை 🙏
ReplyDelete🙏🙏
Deleteஅருமை💐💐
Delete🙏🙏
Delete