பார்த்தும் பார்க்காதுப் போனால்
பார்த்ததைப் பார்க்காதுப் போனால்
பார்த்தது பார்க்காததாகி விடுமோ?
பார்க்காதது பார்த்ததாகிப் போனால்
பார்க்காதது பார்த்ததாகி விடுமோ?
பார்த்ததும் பார்த்ததை மறந்தால்
பார்த்தவர் கர்மயோகியாகிடுவாரோ?
பார்க்க முடியாததைப் பார்த்தால் பார்த்தவர் மர்மயோகியாகிடுவாரோ?
படித்தவர் படிக்காதவராக மாறினால் படித்த படிப்பு பெருந்தாடியாகுமோ?படிக்காதவர் படித்தவராக மாறினால்
படிக்காத படிப்பு குருந்தாடியாகுமோ?
பார்த்தும் பார்க்காதுப் போனால் பார்த்த பார்வை குருடாகிப் போகுமோ?
கேட்ட காது கேட்காதுப் போனால் கேட்ட கதை செவிடாகிப் போகுமோ?
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment