Wednesday, 23 August 2023

சந்திரயானைப் போல் சரித்திரம்

 

சந்திரயானைப் போல் சரித்திரம்

மனிதனை மனிதனே கொல்வதென்பது மிருகத்தனமான கொடுமைதானே?
சாதியினை சாதியால் வெல்வதென்பது மூர்க்கத்தனமான மடமைதானே?

சாதிக்குச் சாதி சங்கம் இருப்பது சாதியை உணர்வோடு வெறுக்கவா?
வீதிக்கு வீதி சாதி கொடி பறப்பது சாதியை வேரோடு அறுக்கவா?

இத்தனை வருடம் பேசியதையே பேசி வேற்றுமையை வளர்ப்பது சரியா?
பேசும் அனைவரும் சாதியைப் பேசியே ஒற்றுமையைத் தகர்ப்பது சரியா?

நாளுக்கு நாள் சாதி சச்சரவுகள் கூடுவது பகுத்தறிவுப் பலனின் வளர்ச்சியா?
நாளுக்கு நாள் சாதி கட்சிகள் கூடுவது படிப்பறிவுப் பலனின் வளர்ச்சியா?

ஒற்றுமையெனப் பேசி வேற்றுமையை வளர்க்கும் அரசியலார் வேண்டுமா?
வேற்றுமையைப் பேசி ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அரசியலும் வேண்டுமா?

இளைஞர்களே இளைஞர்களே.....

வெறுப்பை வெறுத்து பொறுப்பைப் பெற்று உயர்ந்து வாழுங்கள்!
சந்திரயானைப் போல் சரித்திரம் படைத்து தலைநிமிர்ந்து வாழுங்கள்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. மிகவும் அருமை! உயர்ந்த கருத்துகள்! எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்!

    ReplyDelete