மரமும் அழுவதுண்டு
முடியை வெட்டினால் பிழைத்துக் கொள்ளலாம்
மொட்டை அடித்தாலும் பிழைத்துக் கொள்ளலாம்
தழையை வெட்டினால் பிழைத்துக் கொள்ளலாம்
தலையை வெட்டினால் பிழைப்பது எப்படி?
அடித்த காற்றோடு கிளை ஒன்றை இழந்தேன்
ஒடிந்த கிளையோடு உறுப்பு ஒன்றை இழந்தேன்
உடைந்த கிளையை வெட்டியபோது உடைந்தேன்
உடையாததை வெட்டினால் உடையாமல் இருப்பேனா?
வெட்டிக் கழித்திருந்தால் துளிர் விட்டுப் பெருக்கியிருப்பேன்
வெட்டி வீழ்த்தும்போது மரமான நான் உடையாது இருப்பேனா?
அறுத்தபோது என் அழுகைக் குரல் உங்களுக்குக் கேட்கலியா?
நான் அழுதபோது மழையும் சேர்ந்து அழுததைப் பார்க்கலியா?
- தஞ்சை த.இராமநாதன்

மிகவும் அருமை!
ReplyDelete🙏🙏
ReplyDelete