நியாயம் இல்லாதது அநியாயம்
நியாயமே இல்லாதோரிடம் நிலைத்திருப்பது அநியாயமெனில் யோக்கியமே இல்லாதோரிடம் நிறைந்திருப்பது அயோக்கியமோ?
நாகரிகம் இல்லாதோரிடம்
நிலைத்திருப்பது அநாகரிகமெனில்
நாத்திகமே இல்லாதோரிடம்
நிறைந்திருப்பது ஆத்திகமோ?
ஜாக்கிரதையாக இல்லாதோரிடம்
நிலைத்திருப்பது அஜாக்கிரதையெனில்
சாதாரணமாக இல்லாதோரிடம்
நிறைந்திருப்பது அசாதாரணமோ?
சுத்தம் இல்லாதோரிடம்
நிலைத்திருப்பது அசுத்தமெனில்
பந்தமே இல்லாதோரிடம்
சேர்ந்திருப்பது அபத்தமோ?
பலம் இருப்போரிடம்
நிறைந்திருப்பது அம்பலமெனில்
பரம் இருப்போரிடம்
நிலைத்திருப்பது அம்பரமோ?
நயம் இருப்போரிடம்
நிலைத்திருப்பது அபிநயமெனில்
பயம் இருப்போரிடம்
நிறைந்திருப்பது அதிபயமோ?
காரம் இருப்போரிடம்
நிலைத்திருப்பது அகங்காரமெனில்
கோலம் இல்லாதோரிடம்
நிறைந்திருப்பது அலங்கோலமோ?
மதி இருப்போரிடம்
நிலைத்திருப்பது அமைதியெனில்
நீதியே இல்லாதோரிடம் நிறைந்திருப்பது அநீதியோ?
வைப்பு இருப்போரிடம்
வைப்பிருப்பது அவைப்புயெனில்
கரிப்பு இருப்போரிடம்
கலந்திருப்பது அபகரிப்போ?
- தஞ்சை த.இராமநாதன்

Sir super
ReplyDelete🤝🤝
ReplyDelete