நரியும் பரியும் சமமாக முடியாது
ஒழுக்கம் உள்ளாரும்
ஒழுக்கம் இல்லாரும் சமமில்லை
உழைத்துக் களைப்பாரும்
உழைக்காது இருப்பாரும் சமமில்லை
வேளையில் தூங்கி எழுவாரும் காலையில் தூங்கி விழுவாரும் சமமில்லை
பெரியோரை அவமதிப்பாரும் பெரியோரை மதிப்பாரும் சமமில்லை
பார்த்ததும் வணக்கம் சொல்லுவோரும்
வணக்கம் சொல்லாதாரும் சமமில்லை
முகத்தில் பொய்யாக நடிப்பாரும்
அகத்தில் மெய்யாக துடிப்பாரும் சமமில்லை
மானம் காத்து வாழ்வோரும்
மானம் அழித்து வீழ்வோரும் சமமில்லை
குறையோடு கூத்தாடும் குறை குடமும் குறையில்லா நிறை குடமும் சமமில்லை
மறைந்திருந்து ஊளையிடும் நரியும்
மகிழ்ந்தோடும் பரியும் சமமில்லை!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment