சுமக்காது கடந்து செல்வோம்
குழிப் பறிப்போரை தலைமேல் வைத்து மதிக்காது காலடியில் வைப்பதே சரி
கோள் சொல்லியே பழக்கப்பட்டோரை கோல் அடிப்பதைப்போல் அடிப்பதே சரி
படிக்காமலே படித்தோர்க்கு பாடம் புகட்ட
நினைப்போருக்கு பாடம் புகட்டுவதே சரி
எச்சில் இலை கோபுரத்தில் ஒட்டினாலும் காற்றை வைத்து அகற்றுவதே சரி
ஏறிய ஏணியை ஓங்கி உதைப்போரை ஏணியே இல்லாது அகற்றுவதே சரி
பொறாமையுடன் பொய் உரைப்போரை
பொறுமையுடன் ஒதுக்குவதே சரி
ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும்
பருந்தாகாதென உணர்த்துவதே சரி!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment