இறந்தும் தொடரும் அழுகை
இருந்தவரை இருந்தவரின் அருமை இழந்தார்க்குத் தெரிந்ததுமில்லை
இருந்தவரை இறந்தவரின் பெருமை இருப்பார்க்குப் புரிந்ததுமில்லை
இறக்கும்வரை இருந்தவரை சிலபேர் காரணத்தோடு பற்றாமலுமில்லை
இறக்கும்வரை இல்லாதவரை பலபேர் காரணமற்று தூற்றாமலுமில்லை
பொய்யானதைக் கண்டு இறக்கும் முன் இறந்தவர் அழாமல் இருந்ததுமில்லை மெய்யானதைக் கண்டு இறந்த பின் இறந்தவர் அழாமல் இருப்பதுமில்லை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment