வேல் வீச்சுக்கு வேலு நாச்சியார்
அப்பா செல்ல முத்து அம்மா முத்து ஆத்தாள் பெற்றெடுத்த தீரத் திருமகள்
முத்து வடுகநாதரை மணமுடித்து
சிவகங்கையை ஆண்ட வீர மருமகள்
ஆங்கிலேயனை அலறவிட்டு தமிழரின்
வீரத்தை நிலை நாட்டிய தீரக் குலமகள்
குந்தவை நாச்சியார் இனக் குணத்தைப்
பெற்று வேல் ஏந்திய வீர நிலமகள்
பிறந்த மண்ணின் வீரம் காக்க தாக்கத் தயங்காது தாக்கிய மறத்தமிழ் மகள்
முதல் இந்தியப் பெண் போராளியான அரியப் பரம்பரையின் தலை மகள்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment