உதைக்க மாட்டாயா பசுவே?
பாலைக் கறந்து அதில் பாதியளவு நீரைப் பக்குவமாய்க் கலந்தால் அது சமத்து
மடி நிறைந்து சுரந்தப் பாலை உன் சிசு பீச்சிக் குடித்தால் அதுவும் சமத்து
புல்லோடு புண்ணாக்கைக் கொடுத்து பாலைக் கறந்தால் அது சமத்து
கன்றை அவிழ்த்து ஊட்ட விட்டு உடனேப் பிரித்துக் கறந்தால் அதுவும் சமத்து
பலன் இருந்தால் கோ மாதாவெனக் கூவிக் கும்பிடுவதில் அதிச் சமத்து
பலன் இல்லையெனில் போ மாதாவென வெட்டிக் கொல்வதிலும் அதேச் சமத்து!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment