ராஜாவைக் கொல்ல ஆடும் ஆட்டம்
ராஜாவைப் பின் நிறுத்தி சிப்பாய்களை முன் நிறுத்தி ஆடும் ஆட்டம்
சிறு பலிக் கொடுத்து பெரும் பலி வாங்க இரு அறிவாளிகள் ஆடும் ஆட்டம்
ஒரு நகர்வு தவறினாலே வெட்டுப்படும் வாய்ப்பைக் கொடுக்கும் ஆட்டம்
அவசரப்பட்டு வெட்டினால் அடுத்தவரும் வெட்டி வேட்டையாடும் ஆட்டம்
முன்னோக்கிக் குதித்துக் குதித்து இடம் அல்லது வலம் தாக்கும் குதிரையின் ஆட்டம் ராணி கோபம் கொண்டால் கண்ட திசையெல்லாம் தாக்கும் ஆட்டம் இருபுறமும் ராஜா சாகாதிருந்தால் அது சம நிலையில் முடியும் ஆட்டம் அந்தப்புறமோ இந்தப்புறமோ ராஜா செத்தால் முடிந்துவிடும் சதுரங்க ஆட்டம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment