காரல் மார்க்ஸ்
நான்கு வயது மூத்தப் பெண்ணை காதலித்தார்
பெற்றோரின் எதிர்ப்பை எண்ணி பேதலித்தார்
எப்படி எப்படியோ எழுதிப் பார்த்தார் எடுபடவில்லை
ஏழ்மையின் பிடியை எளிதில் முறியடிக்க
முடியவில்லை
பேனா முனைப் போரினை விடாது
தொடர்ந்தார்
எழுத்துப் போரில் தொடர் வெற்றியை
அடைந்தார்
அறிவியலை சேர்த்து பொது உடைமை தந்தார்
சட்டம் படித்ததால் திட்டம் பல வகுத்தும் தந்தார்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment