குருவிப் பாட்டு
என்னக் கிடைக்கும் என்று தெரியாது ஆனாலும் ஏதாவது கிடைக்கும் என்று நம்பி வாழ்வதுதான் வாழ்க்கை!
சேர்த்து வைக்க என்றுமே தெரியாது
ஆனாலும் சேர்ந்ததை வைத்து பகிர்ந்து உண்டு வாழ்வதுதான் வாழ்க்கை!
பசி தாங்கா பிள்ளைகளின் பசியைப் போக்கி பசி தாங்கி வாழும் பெற்றோரின் வாழ்க்கைதான் தியாக வாழ்க்கை!
பிறந்தது முதல் இறக்கும் வரை போராட்டமென சோர்ந்து விடாமல்
போராடும்போதே முடிந்து விடுவதுதான் வாழ்க்கை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment