ரமலான் 2022
கடந்த இரண்டு வருட வழிபாடு புதிதான அனுபவத்துடன் நடந்து முடிந்தது
இந்த வருட வழிப்பாட்டை பழமையான அனுபவ முறையில் நடத்த முடிந்தது
இல்லாதவருக்கு இருப்போர் உதவுவது பண்புகளில் பன்மடங்கு மகத்தானது
அதிலும் தெரியாதவருக்கு உதவுவது மாண்புகளில் எல்லாம் மகத்தானது
பசியோடு இருந்து பசியின் உணர்வை உணர்வோடு உணர்வது உயர்வானது
உயிரோடு வாழும்வரை உறுதியானக் கொள்கையுடன் வாழ்வது உயர்வானது!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment