தீச்சட்டியின் தீவட்டி
பூச்சட்டியென எண்ணி தீச்சட்டியைத் தூக்குவோர் தரத்தில் தாழ்ந்தவரா?
ஆராதனை தாம்பூலத்தைத் தூக்கிச் சுற்றுபவர் தரத்தில் உயர்ந்தவரா?
தேரை இழுத்து தெருவில் நடப்பவர்
என்றென்றும் தரத்தில் தாழ்ந்தவரா?
இழுக்கும் தேரில் அர்ச்சனை செய்பவர்
என்றென்றும் தரத்தில் உயர்ந்தவரா?
பெண்கள் முன்பு மேலாடை அணியாது அர்ச்சனை செய்வோர் தாழ்ந்தவரே!
கையில் சுட்டாலும் மெய்யில் பட்டாலும் தீச்சட்டியைத் தூக்குவோர் உயர்ந்தவரே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment