வங்கிகளும் வாங்கிகளும்
பணம் வாங்கச் செல்லுது ஒரு கூட்டம்
பணம் போடச் செல்லுது ஒரு கூட்டம்
பத்தாமல் வாங்குது ஒரு கூட்டம்
பதுக்காமல் போடுது ஒரு கூட்டம்
வாங்கியவருக்கு கடனால் திண்டாட்டம்
போட்டவருக்கு வட்டியால் கொண்டாட்டம்
கடனை வாங்கும்போது பணக் கஷ்டம்
கடனை அடைக்கும்போது மனக் கஷ்டம்
வங்கி உறவு வங்கியோடு முடியும்
வாங்கி ஓடும் உறவு அடியோடு முறியும்
காசுக்கு ஏத்த தோசை அதுவும் தெரியும்
காசேதான் கடவுள் அதுவும் புரியும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment