Thursday, 17 March 2022

எரிந்து எழுந்த காமன் பண்டிகை

 

எரிந்து எழுந்த காமன் பண்டிகை

போகாதே என்று சொன்னார் சிவன் போவேன் என்று சொன்னார் பார்வதி
போய்விடு என்று சொன்னார் சிவன்
திரும்பி வந்து நொந்து நின்றார் பார்வதி
கடுந்தவம் கொண்டு அமர்ந்தார் சிவன்
தவத்தைக் கலைக்க முற்பட்டார் பார்வதி
நெடுந்தவத்தைத் தொடர்ந்தார் சிவன்
மன்மதன் உதவியை நாடினார் பார்வதி

ஐம்மலர்கள் அம்பினன் அழகு மன்மதன்
காமனின் பேரழகு மனையாள் ரதி
தவத்தைக் கலைக்க அம்போடு காமன்
தடுக்கப் போராடிய அன்போடு ரதி
சிவன் மீது விட்டார் மலரம்பை காமன்
எரித்தவரிடம் எரிந்தவரைக் கேட்டார் ரதி
ரதிக்கென உருவம் கொண்டார் காமன்
கல்லான காமனைக் கண்டார் ரதி!

"தீயவை தீயோடு போகட்டும்
நல்லவை நிலைத்து நிற்கட்டும்"

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment