பொங்கலுக்குப் பொங்கல் பொங்கும் பொங்கல்
தமிழ்நாட்டு மண்ணை எடுத்துக் குழைத்து
பானையைக் கட்சிதமாய் வடிவமைத்து
மண்ணில் விளைந்த கதிரை உதிர்த்து
புதுநெல்லின் அரிசியைப் புடைத்து எடுத்து
காய வைத்த விறகை வைத்து எரித்து
உலைப் பொங்கி வருவதைப் பார்த்து
பச்சரிசி சர்க்கரை முந்திரியைக் கலந்து
திராட்சை ஏலக்காயோடு நெய்யைச் சேர்த்து
மஞ்சள் கொத்தை பானையில் அணிந்து
வாழை இலையில் வைத்துப் படைத்து
சர்க்கரைப் பொங்கல் இயல்புடன் இனித்து
பெரும் பொங்கலைச் சாம்பாரோடு சேர்த்து
பொங்கலைச் சாப்பிடுவோம் மனம் மகிழ்ந்து!
- தஞ்சை த இராமநாதன்

👌👍
ReplyDelete🙏🙏
Deleteமிகவும் நன்று!
ReplyDelete🙏🙏
Delete🙏 💐
ReplyDelete