மாடும் ஆடும் காட்டும் பாடம்
சுகமான சுமையென ஆட்டைக் காத்து அசைபோடும் பாச மாடு அங்கே சுயநலமே சுகமென நாட்டைக் கெடுத்து வேஷமிடும் நாசக் கேடு இங்கே
மிதித்து நடந்தாலும் மேனி வலியைத் தாங்கித் தூங்கும் மாடு அங்கே துடித்துக் கிடந்தாலும் மனித வலியைத் துச்சமென நினைக்கும் நாடு இங்கே
பெறாத மாட்டைத் தாயாக நினைத்து மகிழும் கருப்பழகு ஆடு அங்கே பெற்று வளர்த்தோரை சுமையாக நினைத்து அழியும் பேரிழிவில் வீடு இங்கே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment