Monday, 10 January 2022

ஐந்தும் ஆறும்

 

ஐந்தும் ஆறும் 

உணர்வு மிகுதியோடு வாழ்ந்தாலும்        அறிவு நிறைவோடு வாழுது ஐந்தறிவு                அறிவு மிகுதியோடு வாழ்ந்தாலும்        உணர்வுக் குறைவோடு வாழுது ஆறறிவு 

உயிரைப் பணயம் வைத்து உயிரைக்      காத்து நன்றியோடு வாழுது ஐந்தறிவு                பணம் பார்க்க உயிரைப் பலி கொடுத்து ஏய்த்துப் பிழைப்பை ஓட்டுவது ஆறறிவு 

எதிர்ப் பார்க்காமல் முடிந்த உதவியைச் செய்து எளிய வாழ்வில் ஐந்தறிவு            எதிர்ப் பார்த்து முடிந்தப் பதவியைப் பெற்று ஆடம்பர வாழ்வில் ஆறறிவு!

தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment