Monday, 8 November 2021

கடவுளால்தான் காப்பாற்ற முடியும்

 



கடவுளால்தான் காப்பாற்ற முடியும்

கொள்ளும் அளவிற்கு மும்மாரி மழைப்
பொழிந்த காலம் மறைந்ததும் சோகம்
கொல்லும் அளவிற்கு இம்மாதிரி மழைப்
பொழியும் காலம் வந்ததும் சோகம்

கொல்லையில் பெய்த மழை பள்ளமான வயல் நோக்கிப் புகுந்து வெள்ளமாகும்
வயலே இல்லமானால் பள்ளம் நோக்கிய நீர் குடிப் புகாமல் எங்கேப் போகும்?

பகுத்தறியத் தெரியாதப் பதர்கள் தம்மை பகுத்தறிவாதிகள் என்பதும் கேவலம்
வெள்ளம் வந்ததும் செய்வதறியாது  முடங்கிக் கிடப்பதோ படு கேவலம்

நல்லார் ஒருவரால் பொல்லார்க்கும்
சேர்த்து அளவோடு பொழிந்ததும் மழை
பொல்லார் பலரால் நல்லோரையும் மறந்து அளவற்றுப் பொழிவதும் மழை!

எங்கும் கடவுள் எதிலும் கடவுள் அதை நினை!
அப்படி நினைத்தால் கடவுள் நமக்குத் துணை!

- தஞ்சை த இராமநாதன்

1 comment:

  1. உள்ளக்கிடக்கை எதுகை மோனைகளின் மீதேறி அழகாக பயணிக்கிறது.

    ReplyDelete