இயற்கை நினைத்தால்...
நாள்தோறும் கொட்டும் அருவியால் நிலையாய் ஓடுது வெள்ளம்
ஒரு நாள் கொட்டிய மழையால்
கலகலத்து ஆடுது உள்ளம்
செம்பரம்பாக்கம் குறைந்தால் பஞ்சம்
நிறைந்து திறந்தால் வீட்டிற்குள் தஞ்சம்
சாலையெல்லாம் ஆறாக மாற்றம் வீடெல்லாம் குளமாக நாற்றம்
இயற்கை நீர் வீழ்ச்சியால் எப்போதும் இருந்ததில்லை நமக்குத் தொல்லை
செயற்கை சூழ்ச்சியால் எப்போதும்
இல்லாமலில்லை நமக்குத் தொல்லை
மானைக் கொன்று தின்னும் உலகம்
மயிலைக் கொன்று தின்னும் உலகம்
அநியாயம் அதிகரிக்கும் அவல நிலை
இயற்கையை சீண்டினால் அழிவு நிலை
ஆண்டுக்கு ஆண்டு வெள்ளமும் வரும் ஆய்வு செய்ய தவறாமல் கூட்டமும் வரும்
ஆன்மிகம் லௌகீகம் சமநிலைப் பெறுக
இறைவா மற்றொரு வாய்ப்பைத் தருக!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment