கடலைக் கொல்லையின் காட்சி
மார்கழியில் விதைக் கடலையைத் தேடி
விதைத்தால் சித்திரையில் மகசூல்
சித்திரையில் காய்ந்தக் கடலையைத் தேக்கி ஆடியில் விற்றால் அதிக வசூல்
காய்ந்தக் கடலைச் செடி வைக்கோல் போர் போல் குவித்து வைக்கப்படும்
மழைக் காலத்தில் காய்ந்தக் கடலைச் செடி மாட்டுக்குத் தீவனமாக்கப்படும்
உடைத்தக் கடலைத் தோல் விளைந்த நிலத்திற்கே நன்றியோடு நல் உரமாகும்
சுருங்கியக் கடலைப் பருப்பு அம்மியில் அரைப்படடு கஞ்சிக்கு துவையலாகும்
நிலத்தில் யாவும் விளைந்தாலும் இந்தக் கடலைதான் என்றென்றும் நிலக் கடலை
கிழங்குபோல் ஒளிந்து வேரோடு வேராக விளையும் தமிழ்நாட்டு நிலக் கடலை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment