நீரால் சூழ்ந்த தமிழகம்
சூழ்ந்த வெள்ளம் மழை முடிந்தாலும் இன்னமும் வடிந்த பாடில்லை
வாழ்ந்த இல்லம் இடிந்தாலும் தொல்லை இன்னமும் முடிந்த பாடில்லை
அன்றுப் பார்த்தால் ஆங்காங்கே இருந்தது பலமான ஆற்றுப் பாலம்
இன்றுப் பார்த்தால் ஆங்காங்கே இருப்பது பள்ளமான சேற்றுப் பாலம்
அப்போது வயலெல்லாம் பச்சையாக இருக்கும் நடவு நட்ட பயிரால்
இப்போது வயலெல்லாம் பழுப்பாக இருக்கிறது நட்டுக் கெட்ட பயிரால்
சென்னை முதல் குமரி வரை தொடர்கிறது மண்ணின் எல்லை
சென்னை முதல் குமரி வரை தொடர்கிறது வானின் தொல்லை!
தஞ்சை த இராமநாதன்
Good
ReplyDelete🙏🙏
Delete