இந்தியாவில் குழந்தைகள் தினம்
ஜவஹர்லாலை மறந்தாலும் நேரு மாமாவை மறக்காத குழந்தைகளின் தினம்
மோகன்தாசை மறந்தாலும் காந்தி தாத்தாவை மறக்காத குழந்தைகளின் தினம்
வேலை இல்லாது கவலை இல்லாது சிரித்து வாழ வேண்டிய குழந்தைகளின் தினம்
வெள்ளம் நில்லாது நிம்மதி இல்லாது இருக்கும் சூழலில் வந்தக் குழந்தைகள் தினம்
வயதிற்கேற்ற குழந்தைத் தனம் மாறாமல் இருந்தால் அது உண்மையான குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகள் பத்திரமாக தினமும் வீடு திரும்பினால் அது வெற்றிகரமான குழந்தைகள் தினம்!
தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment