Wednesday, 10 November 2021

உண்மையை உணரும் உணர்வு



 

உண்மையை உணரும் உணர்வு

ஒரு புறம் உண்ண உணவில்லாது 
பசியோடு வாழ்ந்து தவிக்கின்றார்
மறு புறம் தூங்கக் கூட இடமில்லாது
தண்ணீரால் சூழ்ந்து தவிக்கின்றார்

தண்ணி அடிக்க ஆணும் பெண்ணும் பேய் போல் மதுக்கடைக்கு செல்கின்றார்
தண்ணியே அடிக்க ஆரம்பித்தால் நிலை
தடுமாறி குழம்பிப் போய் நிற்கின்றார்

அர்த்தமற்ற ஆன்மிகம் பேசியோர்
அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றார்
அநாகரிக நாத்திகம் பேசியோர்
பயந்து பதுங்கிக் கிடக்கின்றார்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment