உண்மையை உணரும் உணர்வு
ஒரு புறம் உண்ண உணவில்லாது
பசியோடு வாழ்ந்து தவிக்கின்றார்
மறு புறம் தூங்கக் கூட இடமில்லாது
தண்ணீரால் சூழ்ந்து தவிக்கின்றார்
தண்ணி அடிக்க ஆணும் பெண்ணும் பேய் போல் மதுக்கடைக்கு செல்கின்றார்
தண்ணியே அடிக்க ஆரம்பித்தால் நிலை
தடுமாறி குழம்பிப் போய் நிற்கின்றார்
அர்த்தமற்ற ஆன்மிகம் பேசியோர்
அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றார்
அநாகரிக நாத்திகம் பேசியோர்
பயந்து பதுங்கிக் கிடக்கின்றார்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment