இரையைத் தேடி
விடிந்த காலம் நல்ல விடிவு காலமாய் ஆகுமென விடிய வைத்த இறையை நம்பி இரையைத் தேடும் நேரம்
ஒருகால் இரையே கிட்டாமல் போனால் இறையே எங்களுக்கு இரை கொடு என ஒரு காலால் நின்று தவம் புரியும் நேரம்
காலைக் கதிரவனின் கருணை ஒளியில் பனியின் தாக்கம் குறைய நிறைய நேரம் ஆகாதெனக் காத்திருக்கும் நேரம்
சுள்ளென இல்லாது மிதமான சூடேற மெல்லெனக் குளத்தில் குடும்பத்தோடு குதிக்கப் பார்த்திருக்கும் நேரம்
மூத்த வாத்தின் வழியைப் பார்த்து குஞ்சு வாத்தெல்லாம சேர்ந்து இரைதேட நீந்தப் போகும் நேரம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment