Wednesday, 13 October 2021

பகலோனின் பகலொளி

 

பகலோனின் பகலொளி

பானுவின் கதிரால் இடருறும் காலமும் இருக்கும் 

பானுவின் கதிரில்லாது இருளான காலமும் இருக்கும் 

காலைக் கதிரவன் பிரகாச ஒளியைக் கொடுக்கும்

கிழக்குக் கதிரவன் மரத்தின் நிழலை மேற்கில் கொடுக்கும்

சூரியனின் கதிரால் ஒளிச்சேர்க்கை உருவாகும்

ஒளிச்சேர்க்கையால் பிராணவாயு உருவாகும்

ஆதவன் உதித்தால்தான் உலக வாழ்வு சிறக்கும்

ஆதவன் ஒளியால்தான் உயிர் வாழ்வே சிறக்கும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment