பகலோனின் பகலொளி
பானுவின் கதிரால் இடருறும் காலமும் இருக்கும்
பானுவின் கதிரில்லாது இருளான காலமும் இருக்கும்
காலைக் கதிரவன் பிரகாச ஒளியைக் கொடுக்கும்
கிழக்குக் கதிரவன் மரத்தின் நிழலை மேற்கில் கொடுக்கும்
சூரியனின் கதிரால் ஒளிச்சேர்க்கை உருவாகும்
ஒளிச்சேர்க்கையால் பிராணவாயு உருவாகும்
ஆதவன் உதித்தால்தான் உலக வாழ்வு சிறக்கும்
ஆதவன் ஒளியால்தான் உயிர் வாழ்வே சிறக்கும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment