உழைப்பே துணை
உழைத்துக் கொண்டே இருக்கும் வரம் வேண்டும் உழைத்துக் கொண்டே இறக்கும் வரமும் வேண்டும்
உழைப்பின் களைப்பில் உடல் இளைப்பாற வேண்டும் உழைப்பின் நினைப்பில் மனம் களைப்பாறவும் வேண்டும்
உழைப்பவர் கையில் காசு புரள வேண்டும் உழைப்பவர் வாழ கடவுள் அருளவும் வேண்டும்
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் வேண்டும் உழைத்தப் பணத்தை சேமிக்க கச்சிதமும் வேண்டும்
உழைத்து சேர்த்த பாட்டன் சொத்தை காக்க வேண்டும் உழைத்து சேர்த்த அப்பன் சொத்தையும் காக்க வேண்டும்
உழைத்து வாழ்பவர் உறுதியாக எங்கும் வாழ்வர் உழைக்காமல் ஏய்த்து வாழ்பவர் இறுதியாக எங்கும் வீழ்வர்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment